வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது மாணவர்களின் உரிமை.

கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி 
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை:
ப.சிதம்பரம் எச்சரிக்கை.


பொருளாதார சரிவு மற்றும் அதிகரித்து வரும் மோசமான கடன்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக புதுடெல்லியில் இன்று பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆய்வு நடத்தினார்.
 
பின்னர் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-
 
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது மாணவர்களின் உரிமை. எனவே கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கடனை நிராகரிக்கும் பொறுப்பு வங்கியின் கிளை மேலாளருக்கு இல்லை.
 
மேலும் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்று நகல் வழங்க வேண்டும். 
 இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment