ஊமைத்துரையின் எழுச்சி

வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாஞ்சாலங்குறிச்சி ஊமைத் துரைதான் உலகிலேயே மிகவும் அபூர்வமான புரட்சிக்காரர். அவருக்கு காதும் கேளாது. வாயும் பேச வராது. தமது சமிக்ஞைகளினாலேயே மக்கள் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய சக்தியை அவர் பெற்றிருந்தார்.
 பாளையக்காரர்களின் சிறு பிரிவின் தலைவராக விளங்கிய அவர் 1801-ம் ஆண்டில் வெள்ளையர்களை எதிர்த்து நடத்திய கிளர்ச்சி இன்றும் உலக வரலாற்று ஆசிரியர்களை வியக்க வைக்கிறது. தனது சமிக்ஞைகளினாலேயே மக்களை எழுச்சி கொள்ளச் செய்த வீரன் நம் ஊமைத்துரை.
----------------------------------------------

 அடக்குபவர்கள் சுதந்திரத்தை
 தாமாகவே முன்வந்து
 தருவதில்லை;
 ஒடுக்கப்பட்டவர்கள்
 போராடிப் பெறுவதே
 சுதந்திரம்.

No comments:

Post a Comment