ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 13-ந்தேதி வருகை

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாண்புமிகு 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா
13-ந்தேதி வருகை

திருச்சிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 13-ந்தேதி வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 3-ந் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நாள்தோறும் அன்னதானம், வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத் திட்ட உதவிகள் வழங்கியும் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மேற்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதிகள் சந்திக்கும் இடத்தில் மேடை பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் பிறகு தேதி குறிப்பிடாமல் விழா ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி வியாழக்கிழமை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment