பதவி உயர்வில் இட ஒதுக்கீடு : அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

புது தில்லி, செப்., 04 : அரசுப் பணிகளில் பதவி உயர்வின்போதும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

புது தில்லியில் இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதா நிறைவேற்றம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்க இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment