20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி.

சென்னை: புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது.

டி..டி., தேர்வு வழியாகஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரிஆசிரியர், 18 ஆயிரம் பேர்முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்இவர்களுக்குகடந்த, 13ம் தேதிபணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.
இடைநிலைபட்டதாரி ஆசிரியர் அனைவரும்அவரவர்களுக்குஒதுக்கப்பட்ட இடங்களில்பணியில் சேர்ந்து விட்டதாகதொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தனமுதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும்இன்னும்பணி ஒதுக்கீட்டுஆணை வழங்கப்படவில்லை.
ஓரிரு நாளில், "ஆன்-லைன்" வழியில்கலந்தாய்வு நடத்திபணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படஉள்ளனஎனவேதேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும்ஜனவரியில்ஐந்து நாள் பயிற்சியை வழங்க,கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியைமத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது.கல்லூரி ஆசிரியர்கள்அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால்பாட சம்பந்தமாகமூன்று நாட்கள்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம்தகவல் அறியும் உரிமைச் சட்டம்முப்பருவ கல்விமுறைதொடர்மதிப்பீட்டு முறைமாணவர்களுக்கானமத்தியமாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து,இரு நாட்களுக்கும்பயிற்சி அளிக்கஅதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்குஅனைவருக்கும் கல்வி திட்டஇயக்ககம் சார்பில்பயிற்சி வழங்கப்பட உள்ளதுஇவர்களுக்கும்ஐந்து நாள்பயிற்சி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment