கவர்னர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டசபை நாளை1.2.13. கூடுகிறது.

சென்னை:தமிழக சட்டசபையின் இந்தாண்டிற்கான முதல் கூட்டம், கவர்னர் உரையுடன், நாளை துவங்குகிறது. தமிழக சட்டசபையின், ஆண்டு முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். தொடர்ந்து, பிப்ரவரி இறுதி அல்லது, மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இந்த வகையில், இந்தாண்டின் முதல் கூட்டம், நாளை துவங்குகிறது.முதல் கூட்டத்தில், கவர்னர் ரோசய்யா, அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றுகிறார். தொடர்ந்து, திங்கள் முதல் வெள்ளி வரை, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, எம்.எல்.ஏ.,க்கள், கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.


No comments:

Post a Comment