75 டி.இ.ஓ. பணியிடங்களை நிரப்ப வேண்டுகோள்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 75 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்களின் விவரம்:- தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 7 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துவிட்டன. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களைக் கூடுதலாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பாக ஜனவரி 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment