பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு.

சென்னை: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம்சென்னை,பெருங்குடியில்பேருந்து படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள்நான்கு பேர்லாரி மோதி பரிதாபமாக இறந்தனர்இந்தசம்பவத்தைசென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து,விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுஇதைத் தொடர்ந்து,போக்குவரத்து துறைஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையைசமர்ப்பித்ததுஅதில் கூறியுள்ளதாவதுசென்னையில்பள்ளிவேலை நேரத்தைகாலை, 7:30 மணியில் இருந்தும்கல்லூரிவேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில்,மாற்றம் செய்யலாம்.
இந்தக் கருத்தைகல்வித்துறை மற்றும் கல்லூரிகல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம்மேலும்கல்விநிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில்,கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம்,ஆசிரியர்மாணவர்பெற்றோர் மத்தியில்பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
சென்னையைப் பொறுத்த வரைஅரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள்காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்குதுவங்குகின்றனதனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றனதற்போதைய நேரத்தைமாற்றினால்பள்ளியின் தூரத்தை பொறுத்துமுன்கூட்டியேமாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும்குறைந்தபட்சம், 6:45மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும்இதற்குஅதிகாலை, 5:00அல்லது 5:30க்கே எழுந்துகுளித்து முடித்துதயாராக வேண்டியநிலை ஏற்படும்இதனால்அரசின் முயற்சிக்குஆசிரியர்கள்,மாணவர்கள்ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின்கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவதுகாலை,மாலை நேரங்களில்பேருந்துகளின் எண்ணிக்கையை இப்போதேஅதிகரிக்கலாம்மாணவர்களுக்கெனதனியாக சிறப்புபேருந்துகளை இயக்கலாம்அனைத்து பேருந்துகளிலும்கதவுகள்அமைப்பதை கட்டாயமாக்கலாம்இதில் எதையுமே செய்யாமல்,பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால்நடைமுறையில்பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.
காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்துமயக்கம்அடைந்து விழுகின்றனர்இதுபோன்ற சம்பவம்அரசுப்பள்ளிகளிலும் நடக்கிறதுதனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன.இதனால்மாணவர் மட்டுமில்லாமல்பெற்றோர்,ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும்ஆசிரியர்கள்நீண்டதொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர்.அதிகாலையில் எழுந்து தயாரானால் தான்ஆசிரியர்களாலும், 7:30க்குபள்ளிக்குச் செல்ல முடியும்எனவேநேர மாற்றம்செய்யும் முயற்சியைஅரசு கைவிட வேண்டும்இவ்வாறுஅண்ணாமலை கூறினார்.
இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment