மாணவருக்கு பிரம்படி: தலைமையாசிரியர் இடமாற்றம்.

மதுரை: மதுரையில், மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்களை கண்டிக்காத தலைமை ஆசிரியர், கலெக்டரின் நடவடிக்கையால் தஞ்சைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.

மதுரை சொக்கிக்குளம் எஸ்.டி.ஏ., மெட்ரிக் பள்ளியில், டிசம்பரில், மாணவர்களின் அடையாள அட்டையை ஆய்வு செய்த போது, சில சேதமடைந்து இருந்தன. அவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.
ரேஸ்கோர்ஸ் காலனியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எத்தியோப்பியா நாட்டில் பணியாற்றும் மாணவரின் தந்தை ஜோசப், இ-மெயிலில், கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்கு புகார் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, மெட்ரிக் ஆய்வாளர் ஜீவானந்தம் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார். அதில், திருப்தி இல்லாததால், மாணவரின் தந்தை மதுரை வந்தார். கலெக்டரிடம் மீண்டும் புகார் தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தி, பிரம்படி ஆசிரியரை உடனே கைது செய்ய, தல்லாகுளம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதற்கிடையே, பள்ளியின் தலைமை ஆசிரியரை, பதவி இறக்கம் செய்து, தஞ்சைக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment