டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி குரூப்-2 தேர்வை நடத்தியது. 3,687 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேர்காணல் நடக்கிறது.

CLICK HERE TO VIEW THE RESULTS.

No comments:

Post a Comment