மாண்புமிகு முதல்வர் அவர்களிடம், 

     CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுதல் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டிடும் கோரிக்கையினை ஆசிரியர்கள்  ஒவ்வொருவரும் அனுப்புவது பயனளிக்கும் என்ற நோக்கத்தில் அதற்கென விண்ணப்பம் ஒன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளோம்.

 இதனை சங்கம் சார்ந்ததாக கருதாமல், இக்கோரிக்கை அவசியம் என எண்ணும் ஒவ்வொரு ஆசிரியரும் இதனை பதிவிறக்கம் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகள் நீங்கள் அறிந்தவைகளே. இருப்பினும் இந்த விண்ணப்பத்தில் சங்கம் சார்ந்த கருத்துக்களே இடம்பெறவில்லை.  எனவே கல்விசேவை செய்துவரும் நம் ஆசிரியர் சமுதாய இணைய சேவை செய்துவரும் தோழர்கள் அனைவரும் இதனை வெளியிட்டு உதவிட அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


No comments:

Post a Comment