தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் டெல்லி மேல்–சபை தேர்தல் பார்வையாளராக நியமனம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.

டெல்லி மேல்–சபை தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
டெல்லி மேல்–சபை தேர்தல்

வரும் 27–ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற மேல்–சபை தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 20பி–ன்படி, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.இந்த தேர்தலில், வேட்பு மனுக்களை பரிசீலித்தல், தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகிய அனைத்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முழுமையாக மேற்பார்வையிடுவார்
இந்த தேர்தலில், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமை தேர்தல் அதிகாரி முழுமையாக மேற்பார்வை செய்வார். தேர்தல் முடிந்தபிறகு அதுதொடர்பான அறிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment