உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் இயக்குனருடன் சந்திப்பு.



  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் கௌரவத் தலைவர் திரு அ.சுந்தரராஜன்,தலைவர்   திரு மு.அய்யாசாமி, பொதுச் செயலாளர்  திரு.ச,சௌந்தரராஜன், பொருளாளர்   திரு. அ.ஆரோக்கியம்,  தலைமை நிலைய செயலாளர் திரு.இரா.கணேசன்., திருச்சி மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  அருளானந்தம் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர். ரெ.இளங்கோவன் அவர்களை 07.08.2013 அன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளிகளில்ஆசிரியர்கள்  காலம் தவறாது வருகை புரிய  உரிய நடவடிக்கைகளை  உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

       உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு தொலைபேசி வசதியுடன் கூடிய இன்டர்நெட் வசதி செய்து தரப்படவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மூன்று பருவங்களிலும் இலவச பாடநூல் வழங்கிட மாவட்ட அளவில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அல்லாத தொடர்பு அலுவலர் ஒருவரை நியமனம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இயக்குனர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.   நமது பிரதான கோரிக்கையான பதவி உயர்வு பணியிடமாக அறிவித்தல் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment