வேலூர் பகுதி உயர்நிலை பள்ளிகளில் தனி ஊதியம் சார்பாக தணிக்கை நடந்ததாக வெளியிடப்பட்ட தகவல்களினால், தற்போது நிலவும் நிலைகளுக்காக, தற்போது இணையவழி கல்வி சேவை (முகநூல் உட்பட ) செய்யும் நண்பர்களுக்கு பணிவான அன்பு வேண்டுகோள்.

வேலூர் பகுதி பள்ளிகளில் தனி ஊதியம் சார்பாக தணிக்கை நடந்ததாக    சில பக்கங்களை நாம் வெளியிட்டோம். அதனை தொடர்ந்து நாமும் அதற்கு தகுதியான விளக்கங்களை வெளியிட்டோம்.  இருப்பினும் நாம் அனைவரும் வெளியிட்ட விளக்கங்களை விட தற்போது தணிக்கை    தகவல்களே மேலோங்கி உள்ளது.

நாம் வெளியிட்ட தணிக்கை தாள்களில்    தணிக்கையாளர்  கையெழுத்தும் இல்லை, தலைமையாசிரியர் கையெழுத்தும் இல்லை. சில பக்கங்கள் கையாலும், சில பக்கங்கள் டைப் செய்தும் இருந்தது. இதனையே நாமும் வெளியிட்டு, விளக்கமும் அளித்துவிட்டோம். இருப்பினும் தற்போது மேலோங்கி நிற்கும் தணிக்கை குறித்த நிலைக்கு ஒரு முறையான தீர்வை ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. 

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட முறையான தணிக்கை அறிக்கையை பெற்று அதனை வெளியிட்டால் அதனை வைத்து அதற்குரிய தணிக்கையாளர் அல்லது துறை அதிகாரி அவர்களிடம் முறையான மனுவினை முன்வைத்து அரசாணைப்படியான உண்மை நிலையை விளக்கி  அரசாணைப்படியாக பெற்றுவரும்    பயனை  தணிக்கை போன்ற நிலைகள் ஏற்படாமல் தொடர்ந்து பெற  இயலும். 

இவ்வாறான ஒரு முறையான தீர்வை ஏற்படுத்துவது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதை  தவிர்க்க உதவும். இல்லையெனில் இவ்விதமான சிக்கல்களுக்கு நாமே காரணமாக வாய்ப்பு அதிகம்.   

முறையான தணிக்கை அறிக்கையை பெற முயற்சி செய்யுங்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் அதனை வழங்கிட முன்வாருங்கள். நன்றி.  









No comments:

Post a Comment