பொறியியல் கல்லூரி


ஆசிரியர்களுக்கு இனி அடையாள 

அட்டை!

தமிழகத்தில் 538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை. சாதாரண பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கியே பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிளே பிஇ வகுப்பை எடுக்க வைக்கின்றனர். பல்கலைக்ககழு ஆய்வுக்கு வரும் போது, வேறு கல்லூரிகளில் பணியுரியும் ஆசிரியர்களை வரவைத்து, போலி ஆவணங்களை தயார் செய்து, ஏமாற்றி விடுகின்றனர்.

இதைத் தடுப்பதற்காக, தனியார் பொறியில் கல்லூரியில் பணியாற்றும் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அடையான அட்டை வழங்கி, அவர்களின் முழுமையான விவரங்களை, இணையதளத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த அடையாள அட்டையைக் கொண்டு ஒரு ஆசிரியர் எங்கு படித்தார், எங்கெல்லாம் பணியாற்றினார், தற்போது எங்கே பணியாற்றுகிறார் என அவர் ஜாதகத்தையே எடுத்துவிட முடியும் என்பதால் ஏமாற்ற முடியாது.

No comments:

Post a Comment