பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் 
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணி
Dec.5
விழுப்புரம் : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் வரும் 6ம் தேதி வரை மாநில அளவில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இதில், அமைச்சு பணியாளர்களுக்கு என இணை மற்றும் துணை இயக்குனர் பணியிடம் வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்காக மாவட்டந் தோறும் அலுவலர்களை நியமிக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்காக பணியாளர்களை அலைக்கழிக்க கூடாது.

அமைச்சு பணியாளர்களுக்கு நேர்முக உதவியாளர் (நிர்வாகம்), என்ற பணியிடத்தை சி.இ.ஓ., அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டும். பள்ளி இரவு காவலர்களுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுமுறை வழங்க வேண்டும் உட்பட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் 248 பேர் கலந்து கொண்டனர்.

Click Here

No comments:

Post a Comment